WordPress Themes
ரணங்களின் மலர்ச்செண்டு

Original price was: LKR. 660.Current price is: LKR. 590.

Author :வண்ணதாசன்
Categories :கவிதை
Subjects :பிற
No of Pages :0
Publication :சந்தியா பதிப்பகம்
Year :2017

Out of stock

Out of stock

Description

கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெருநிலைக்கு முனையும் புத்தத் துறவியைப் போலவும் நள்ளிருள் நிலாவின் மௌன நகர்ச்சியைப் போலவும் சதா காலமும் எண்ணமும் எழுத்துமாக வாழும் பவித்ரன் வண்ணதாசன்.

இவரது உலகில் அன்பு உண்டு. ஆரவாரமில்லை; சமயமும் இல்லை. சமயோசிதமும் இருக்காது. மரமாய் நிழலாய் கனிந்த மனிதர்களின் வாழ்வும் காட்சியும் காட்சிப்பிழைகளும் கொண்டவை இவரது கவிதைக் கணங்கள். “யாருடனும் போட்டி இல்லை எனக்கு” என்று இவர் பிரகடனப்படுத்தினாலும் போட்டிப் போட்டுக் கொண்டு இவரிடம் வந்து சேர்கிறார்கள் அடுத்தடுத்த தலைமுறையினர்.

ரணங்களின் மலர்ச்செண்டு கல்யாண்ஜியின் மொத்த வாழ்வனுபவத்தின் திரட்சியாகவும் மனம் கடந்த நிலையில் வந்திறங்கிய வார்த்தைகளாகவும் நம்மைச் சலனப்படுத்துகின்றன.

இத்தொகுப்பில் வாழ்வின் ரகசியத்தை வாழ்வு தரும் வலியோடு வரைந்திருக்கிறார் கல்யாண்ஜி. இல்லை கல்யாண சுந்தரன்.

Relate Books

பணம்சார் உளவியல்

Original price was: LKR. 2110.Current price is: LKR. 1900. Add to cart
Add to Wishlist

Out of stock

ப்ராஜக்ட் ‘ஃ’

Original price was: LKR. 1125.Current price is: LKR. 900. Read more
Add to Wishlist

Out of stock

ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்

Original price was: LKR. 1260.Current price is: LKR. 1010. Read more
Add to Wishlist

Out of stock

கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?

Original price was: LKR. 720.Current price is: LKR. 610. Read more
Add to Wishlist

Out of stock

தேய்பிறை இரவுகளின் கதைகள்

Original price was: LKR. 1450.Current price is: LKR. 1080. Read more
Add to Wishlist